திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் திருச்சியில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் திருச்சியில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டச் செயலர் என். கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜவஹர்லால் நேரு, மாவட்ட அமைப்புச் செயலர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில நிர்வாகிகள் செல்வராஜ், சாகுல்ஹமீது, முருகானந்தம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாவட்டம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.