திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்ற அரசு வழக்குரைஞர் அதிரடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தின் அரசுத் தரப்பு வழக்குரைஞர் கிருஷ்ணவேணி என்பவர், கடந்த, 2017ம் ஆண்டு, ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். இவரது கணவர் அதிமுகவில் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணவேணியை அரசு வழக்குரைஞர் பொறுப்பிலிருந்து நீக்கி, சட்ட அமைச்சக செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இடத்தில் புதிதாக யாரையும்
நியமிக்கப்படவில்லை.