உலக நன்மைக்காகவும், அனைவருக்கும் லட்சுமிகடாட்சம் கிடைக்கவும் திருச்சி மாவட்டம், லால்குடி பரமசிவபுரம் சாரதா இல்லத்தில் சனிக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.
இப்பகுதிக்கு கொண்டு வரப்பட்ட பசுக்களுக்கு மாலை அணிவித்து, பிரார்த்தனைகள், பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட பதிவு பெற்ற பிராமணர் சங்கத்தின் தலைவர் தத்தாத்ரேயன் என்கிற சங்கர், செயலர் ஸ்ரீதர் சாஸ்திரி, தென்பாரத பாரதிய கிசான் சங்க அமைப்புச் செயலர் ஸ்ரீகணேசன், லால்குடி வீரசேகரன், ரயில் ரங்கராஜன், சீனிவாசன், அக்ரி சுப்பிரமணியன், ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவில் லால்குடி கேதார்நாத் நன்றி கூறினார்.