உலக ஆத்ரட்டிஸ் தின்த்தை ஒட்டி, திருச்சி ஜி.வி.என். மருத்துவமனை சார்பில் மூட்டுத் தேய்மானம் வென்றவர்களுக்கான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி ஐ.எம்.ஏ. ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூட்டுத் தேய்மான பிரச்னை ஏற்பட்டு அதில் குணமடைந்தவர்களுடனான கருத்து பரிமாற்றமும், அதனைத் தொடர்ந்து முனைவர் சோ. சத்தியசீலன் தலைமையில், சமுதாய முன்னேற்றத்துக்கு பெரிதும் துணை புரிவது ஆண்களே, பெண்களே என்ற தலைப்பிலான பட்டி மன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவர் வி.ஜெ. செந்தில் தலைமையில் மருத்துவர் சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பங்கேற்றோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.