அனிதாவுக்கு அனைத்து கட்சியினர் அஞ்சலி
நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா படத்துக்கு திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா படத்துக்கு திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனிதாவின் படத்துக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் முசிறி தொகுதி செயலர் மா. கலைச்செல்வன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி திருச்சி மேற்கு மாவட்டச் செயலர் ராவணன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் நல்லுசாமி, நகர செயலர்கள் இளங்கோ (மதிமுக) ரத்தினம் (திக) திமுக நகர மாணவரணி அமைப்பாளர் தங்க கோபிநாத் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.