தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் இறந்து கிடந்த விவசாயி சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
தொட்டியம் அருகே மேலக்காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராக்கன் மகன் மணி (41). வியாழக்கிழமை அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மணி வீடு திரும்பவில்லை.
இதையடுத்து குடும்பத்தினர் காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்நிலையில், வரதராஜபுரத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் தண்ணீரில் மணியின் சடலம் மிதந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற காட்டுப்புத்தூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.