திருச்சி

நீரில் மூழ்கிய இளைஞர்

DIN


திருச்சி மாவட்டம், முசிறி அருகே காவிரி ஆற்றில் சனிக்கிழமை இரவு விநாயகர் சிலை கரைப்பின்போது, நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரைப் போலீஸார் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
முசிறி சுற்று வட்டாரப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கொண்டுவந்த விநாயகர் சிலையை முசிறி அருகேயுள்ள கொக்குவெட்டி கருப்பண்ணசாமி கோயில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் அப்பகுதி இளைஞர்கள் கரைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற மேட்டுப்பாளையம் சேர்ந்த வடிவேல் மகன் சாமிநாதன் (17) தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த முசிறி தீயணைப்புத் துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT