திருச்சி

செங்குளத்தில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

DIN

மணப்பாறை அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம், வளநாடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 3 விநாயகர் சிலைகள் ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. அலங்கார தேர்களில் சிவன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, விஸ்வஹிந்து பரிஷத் மாநில பொருளாளர் என்.ஆர்.என்.பாண்டியன் காவிக் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் செங்குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டது. 
பிரச்னைக்குரிய பகுதி என்பதால் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT