திருச்சி

திருச்சி அருகே பெரியார் சிலை சேதம்

DIN

திருச்சி அருகே சோமரசம்பேட்டையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து திராவிடர் கழகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் கடந்த 1991ஆம் ஆண்டு பெரியார் சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில், இந்த சிலையில் இருந்த கைத்தடியை மர்ம நபர்கள் சிலர் திங்கள்கிழமை அதிகாலை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து, மணிகண்டம் ஒன்றிய தி.க. தலைவர் சா. செபஸ்தியான் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.   புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT