திருச்சி

திருவானைக்காவில் ஏப். 19-இல் பஞ்சப்பிரகார வைபவ காட்சி

DIN

பஞ்சப்பூத திருத்தலத்தில் நீர்த்தலமானது திருவானைக்கா கோயிலில் நடைபெறும் அனைத்து உற்ஸவ விழாக்களும் மிகவும் பிரசித்திபெற்றது. 
இதில், வரும் 19 ஆம் தேதி நடைபெறும் பஞ்சப்பிரகார வைபவ காட்சி விழாவும் ஒன்று. அழகான பெண்ணின் மீது மோகம் கொண்டு படைத்தல் தொழிலை மறந்து விட்டான் பிரம்மன். அவரை சந்திக்கச்சென்ற சிவபெருமான், பார்வதி ஆகியோர் உருமாறி சென்றனர். 
பிரம்மன் தன் தவ வலிமையால் உருமாறி வந்த இறைவனை தரிசித்து தனது தவறை மன்னிக்குமாறு கோரினார். ஆசையைத் துறக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாகக் கொண்டு இறைவன் இறைவியாகவும், இறைவி இறைவனாகவும் உருமாறி 5 பிரகாரங்களையும் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT