திருச்சி

சாலையில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

DIN

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்தது.
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத்  தேரோட்டத்துக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செவ்வாய்க்கிழமை நடைப்பயணமாக கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனர். இதனால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. வாகனங்களும்  மெதுவாக செல்ல நேரிட்டது.
இந்த நிலையில்,  பிற்பகல் 12.45 மணியளவில் கூத்தூர் பாலம் அருகே சாலையில் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது.  இதனால் அதிர்ச்சியடைந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரும் சாலையில் வண்டியை நிறுத்தி தப்பினர்.
சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டு கடுமையான வெயில் காரணமாக தீப்பற்றியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT