திருச்சி

தந்தைக்கு கத்திக் குத்து: மகன் கைது

DIN


குடிபோதையில் தாயை தாக்கிய தந்தையை கத்தியால் குத்திய மகனை  போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி காஜாபேட்டை, கீழகிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (45). காந்தி மார்க்கெட்டில் சுமை தொழியான இவருக்கு குடிபழக்கம் இருந்துவந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு குடிபோதையில் வந்தவர் மனைவி ரெங்கம்மாளை தாக்கி துன்புறுத்தியுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அவரது மகன் மோகனசுந்தரம் (25), தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தந்தை நாகராஜின் வயிற்றில் குத்தியுள்ளார்.  
இதில், படுகாயமடைந்த நாகராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
இதுகுறித்து பாலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து மோகனசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT