திருச்சி

மணப்பாறை அருகே: அரசுப் பேருந்து மோதி விவசாயி பலி

DIN


 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் சேசலூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஏழுமலை(35). விவசாயி. ஏழுமலை, சனிக்கிழமை மாலை வையம்பட்டியில் நடைபெற்ற வாரச் சந்தையில் காய்கறி வாங்கிக்கொண்டு பேருந்தில் வீடு திரும்பியவர் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி பேருந்து நிறுத்ததில் இறங்கி சேசலூரை நோக்கி
நடந்து சென்றார். 
   அப்போது ஏழுமலை மீது, திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
   தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை  மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து வையம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உளுந்து, எள், கடலை பயிா்களை சாகுபடி செய்ய அறிவுறுத்தல்

கட்டுகுடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு

செட்டிநாடு உணவுப் பொருள்கள் விற்பனைத் திருவிழா

கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சி

திருப்பத்தூரில் முதியவரிடம் பணம் திருட்டு

SCROLL FOR NEXT