திருச்சி

குண்டர் சட்டத்தில் கைது

DIN


தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ப. ரவி (43). இவர், கடத்தல் வழக்கில் புள்ளம்பாடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில்  பல்வேறு காவல்நிலையங்களில் ரவி மீது வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு, புள்ளம்பாடி போலீஸார் பரிந்துரைத்தனர். அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், ரவியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டார். அதனையடுத்து அவர் தண்டனைக் கைதிகள் பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT