திருச்சி

சமையல் எரிவாயு உருளை வெடித்து பெண் பலி

DIN


திருச்சி தேவதானத்தில் புதன்கிழமை சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் பெண் உயிரிழந்தார்.
திருச்சி தேவதானம் பகுதியைச் சேர்ந்த ரவி மனைவி விஜயலட்சுமி(45). காய்கறி வியாபாரியான இவர், ஏப். 17 ஆம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் பலத்த காயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு  திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விஜயலட்சுமியின் தந்தை மாசிலாமணி கொடுத்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய சார்பு- ஆய்வாளர் சுபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT