திருச்சி

பாரதிதாசன் பல்கலை. ஆய்வகத்தில் மாணவி தற்கொலைக்கு முயற்சி

DIN


திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக ஆய்வகத்தில் மாணவி பாதரசத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஆத்மநாதன் மகள் சிவனேஸ்வரி (25). இவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், முதுகலை வாழ்வியல் அறிவியல்  பிரிவில்  படித்து வருகிறார்.  இந்நிலையில், புதன்கிழமை காலை  11 மணியளவில், பல்கலைக்கழக ஆய்வகத்தில் சிவனேஸ்வரி பயிற்சி வகுப்பிலிருந்த போது, அங்கிருந்த பாதரசத்தை குடித்துள்ளார்.இதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரை அழைத்துச் சென்று திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நவல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT