திருச்சி

அரசு மருத்துவமனைவளாகத்தில் இருந்து இரு சடலங்கள் மீட்பு

DIN


திருச்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவரின்  சடலங்கள் கிடந்தது குறித்து போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மகாத்மாகாந்தி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பெண் உள்நோயாளிகள் தங்கியிருக்கும் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்றும், வெளிநோயாளிகள் பிரிவுக்கான அரசு மருத்துவமனையின்  பழைய கட்டடம் அருகே 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்றும் கிடந்தது. இவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி  பத்மநாபன் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனை காவல்நிலைய போலீஸார் இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக் கிடங்கில் வைத்துள்ளனர்.மேலும், வழக்குப்பதிவு செய்து சடலங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT