திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் தங்களது பதிவை இணையம் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என டிடீசியா அமைப்பின் தலைவர் என்.கனகசபாபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு தொழிற்சாலையும் தங்களது பதிவைப் புதுப்பித்துக் கொள்ளவுள்ள நடைமுறைகளை இனிமேல் இணையம் மூலமாக மட்டுமே புதுப்பித்துக் கொள்ள முடியும். அதற்காக திருச்சி கோட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் உரிமையாளர்களின் விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளை நடத்துவோர் அது சம்பந்தமான விபரங்களை இணையதளத்தில் சரிபார்த்து திருத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணையம் மூலமாக நிறுவன உரிமையாளர், பங்குதாரர்கள், மேலாளர், கட்டட உரிமையாளர் விபரங்கள் மற்றும் தொழிற்சாலை தொடர்புடைய எண்கள், ஆதார் எண், ஜி.எஸ்.டி.எண் போன்றவற்றையும் இணையத்தில் புதுப்பித்துக் கொள்ளலாம். இது தொடர்பாக துணை இயக்குநர், கூடுதல் இயக்குநர் அலுவலகம்,அப்துல்சலாம் தெரு,காஜா நகர், மண்ணார்புரம்,திருச்சி-620020. புதிய பதிவுக்கான இணையதள முகவரி
ட்ற்ற்ல்://க்ண்ள்ட்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்.மேலும் சந்தேகங்களுக்கு 0431-2420235 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.