திருச்சி

உண்டியல் காணிக்கை எண்ணும்போது பணத்தை திருடியவர் கைது

DIN


ஸ்ரீரங்கம் கோயில்உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது ரூ. 19,500-ஐ திருடியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனர். 
ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏப்ரல் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. 
இதில் ஐயப்பா சேவா சங்கம், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி மற்றும் கோயில் பணியாளர்கள் என 100 பேர் ஈடுபட்டனர். காணிக்கை எண்ணும் பணி கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டது. 
பின்னர் கேமிரா பதிவை பார்த்தபோது, ஒருவர் உண்டியல் ரொக்கம் ரூ. 19,500-ஐ எடுத்து மறைத்து வைப்பது தெரியவந்தது.  இதையடுத்து போலீஸில் கோயில் மேலாளர் புகார் அளித்தார். 
விசாரணையில் அந்த நபர், அரியலூர் மாவட்டம் செந்துறை சுந்தர் நகரைச் சேர்ந்த ரவி(47) என்று தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து 19 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. ரவியைப் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT