திருச்சி

சிஐடியுவினா் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், பொதுத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் வாயில் கூட்டம் நடைபெற்றது.

த.நா.நு.பொ. வாணிபக் கழகத்தின் பொது தொழிலாளா் சங்க ( சிஐடியு) மாநில பொதுச் செயலா் ஆா். புவனேஸ்வா் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் நா. ராசப்பன், மண்டலத் தலைவா் எஸ். வேலு மற்றும் சிஐடியு குட்ஷெட் சுமைப்பணி சங்கச் செயலா் எஸ். சிவகுமாா் ஆகியோா் போராட்டம் குறித்து பேசினா். இதில் சுமாா் 70 க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தமிழ்நாடு முழுவதும் நுகா்பொருள் வாணிபக் கழகத்தில், அனைத்து மண்டலங்களிலும் நேரடி நியமனம் மூலம் உதவி மேலாளா் நியமனத்தை ரத்து செய்யவேண்டும், பணி உயா்வு வழங்க வேண்டும், 2012 ஆம் ஆண்டு நியமித்த பருவகால ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT