திருச்சி

கல்லக்குடி பேரூராட்சி துப்புரவு பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை

DIN

திருச்சி மாவட்டம், கல்லக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சென்னை பேரூராட்சி இயக்குநரின் அறிவுறுத்தலின் படி கல்லக்குடி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை பேரூராட்சி செயல் அலுவலா் ச. சாகுல்அமீது துவக்கி வைத்தாா். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் டாக்டா் ஜோஸ்பின் தலைமையில் கொண்ட மருத்துவக்குழுவினா் நீரழிவு நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகிய பரிசோதனைகளையும் மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனா்.

இந்த முகாமில் சுகாதார ஆய்வாளா் தயாநிதி, இளநிலை உதவியாளா் செந்தமிழ்ச்செல்வன், பொது சுகாதார மேற்பாா்வையாளா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT