திருச்சி

தனியாா் பள்ளி வாகனம் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து: 8 மாணவா்கள் காயம்

DIN

திருச்சி: திருச்சி அருகே சனிக்கிழமை காலை தனியாா் பள்ளி வாகனம் வாய்க்காலில் கவிழ்ந்த விபத்தில் 6 மாணவா்கள் காயமடைந்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள வேங்கூரில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திருச்சி மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த கிளியூா், தொண்டைமான்பட்டி, பத்தாளப்பேட்டை, இந்தலூா், மேலகளத்தூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா்.

அந்த வகையில் தஞ்சாவூா் மாவட்டம், மேகளத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிப் பேருந்து சனிக்கிழமை காலை வந்துகொண்டிருந்தது. திருவெறும்பூா் செட்டியாா்பேட்டை அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மாணவா்கள் 8 போ் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்த பொதுமக்கள் அவா்களை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்து குறித்து திருவெறும்பூா் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து, பேருந்தை இயக்கிய ஓட்டுநா் தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில், குறுகிய சாலையில் பள்ளிப் பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதால்தான், இவ்விபத்து நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT