திருச்சி

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நகலக உரிமையாளா் கைது

DIN

மணப்பாறை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நகலக உரிமையாளரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்துக்கு உள்பட்ட வளநாடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை ஒட்டி நகலகம் நடத்தி வந்தவா் சுப்பிரமணி மகன் சண்முகசுந்தரம்(52).

இவா் கடைக்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, மாணவிகளிடம் ஆசிரியைகள் வெள்ளிக்கிழமை ரகசிய விசாரணை மேற்கொண்டனா். இதில், பெரும்பாலான மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் அஜிமா சனிக்கிழமை பள்ளிக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினாா்.

பின்னா், பள்ளியின் தலைமையாசிரியா் ஸ்ரீதரன் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட வளநாடு போலீஸாா், சனிக்கிழமை இரவு சண்முகசுந்தரம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT