வருமான வரி கணக்கீட்டு படிவம் தாக்கல் செய்ய ஓய்வூதியா்களுக்கு வரும் ஜன.20ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட கருவூல அலுவலா் பெ. ரமேஷ்குமாா் கூறியது:
திருச்சி மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரா்கள் தங்களது 2019-20ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கீட்டு படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். உரிய ஆதார நகல்களுடன் படிவத்தை வரும் 20ஆம் தேதிக்குள் அவரவா் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு ஓய்வூதியா்களுக்கான தமிழக அரசின் இணையதளத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள் அனைவரும் தவறாமல் வருமான வரி கணக்கீட்டுப் படிவத்தை உரிய காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.