திருச்சி

மீன்பிடி வலையில் சிக்கிய மலைப் பாம்பு

திருச்சியில் மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து  வனப்பகுதியில் விட்டனர்.

DIN

திருச்சியில் மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து  வனப்பகுதியில் விட்டனர்.
திருச்சி ஓலையூர் பகுதியைச் சேர்ந்தவர்  சே. ஜெகன். இவர், தனது நண்பர்களுடன் திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் மீன்பிடிக்க வலையை போட்டுள்ளார்.  
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வலையில் ஏதோ சிக்கியிருப்பதை அறிந்து வெளியே எடுத்தபோது சுமார் 8 அடி நீள மலைப்பாம்பு இருந்தது. இதனையடுத்து தகவலறிந்து  வந்த வனத்துறையினரிடம் பாம்பை ஒப்படைத்தனர். அவர்கள் பாம்பை எடுத்துச் சென்று துறையூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT