திருச்சி

வைகோ வருகையை எதிர்த்து முழக்கமிட்ட இளைஞர் கைது

DIN

மதிமுக பொதுச் செயலர் வைகோ வருகையை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சொற்பொழிவில் உரையாற்றுவதற்காக வைகோ வந்தார். 
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தி வருவதால், வைகோ வருகையின்போது பாரத் மாதா முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில பாரத இந்து மகா சபையினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி நுழைவு வாயில் முன்பு செவ்வாய்க்கிழமை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
வைகோ கார் வருவதையறிந்து அந்தப் பகுதியில் நின்றபடி பாரத் மாதா கீ ஜே என முழக்கமிட்ட அகில பாரத இந்து மகா சபையின் மாவட்டத்தலைவர் ஆனந்தை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

SCROLL FOR NEXT