திருச்சி

போலி மது தயாரித்து விற்ற வழக்கில் மேலும் இருவர் கைது

DIN

துறையூர் அருகே போலி மது தயாரித்து விற்ற வழக்கில் தொடர்புடைய இருவரைப் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். 
துறையூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர்(பொ) கண்ணதாசன் தலைமையில் மதுவிலக்கு அமல் போலீஸார் பெரமங்கலத்தில் வியாழக்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்ததில், காருக்குள் மது பாட்டில்கள் மீது ஒட்டப்படும் லேபிள்கள்,  ஹாலோகிராம் ஸ்டிக்கரும் இருந்தது. இதையடுத்து, காரில் இருந்து இருவரிடம் விசாரித்ததில், அவர்கள் இருவரும், போலி மது பாட்டில்கள் விற்பனையில் தொடர்புள்ளவர்களும், போலீஸாரால் தேடப்பட்டு வரும் மேலகொண்டயம்பேட்டையைச் சேர்ந்த செல்வம் மகன் கார்த்தி(29), நாராயணன் மகன் அஜய்(20) என்பதும், இவர்கள் இருவரும் பிப். 19-இல் கைதான ஸ்ரீரங்கத்தைச்சேர்ந்த சரத் குமாருடன் போலி மது தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார்,  கார், ஸ்டிக்கர் லேபிள்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT