திருச்சி

ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்  நூதனப் போராட்டம்

DIN

ஸ்ரீரங்கம் வடக்குத்தேவி தெருவில்  3 மாதங்களாக மூடப்படாமல் உள்ள சாக்கடைப் பள்ளத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்கள்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினர்.
மாநகராட்சியின் 3 ஆவது வார்டுக்குள்பட்ட இப்பகுதியில், சாக்கடைப் பராமரிப்புப் பணிக்காக 3 மாதங்களுக்கு தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது.  இதுகுறித்து மாநகராட்சி கோட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. 
இதனால் அதிருப்தியடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதிச் செயலர் தர்மா தலைமையிலான நிர்வாகிகள், சாக்கடை பள்ளத்தில் கம்பு நட்டு வைத்து, படையலிட்டு இறுதிச்சடங்கு நடத்தினர். போராட்டத்தில் சங்கத்தின் துணைச்செயலர்   ஜயக்குமார், சந்துரு, லோகு, முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT