திருச்சி

நல்லாண்டவர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7.27 லட்சம்

DIN


மணப்பாறை: மணப்பாறை ஸ்ரீமான்பூண்டி நல்லாண்டவர் திருக்கோயில் காலாண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ரூ.7.27 லட்சம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ப.ராணி, செயல் அலுவலர் வே.பிரபாகர் மற்றும் ஆலய பரம்பரை அறங்காவலர் முத்துவீர லெக்கய நாயக்கர் முன்னிலையில் நடைபெற்ற காணிக்கை எண்ணும் பணியில், ரூ.7.27 லட்சம் ரொக்கம், 18 கிராம் தங்கம், 51 கிராம் வெள்ளி கிடைத்தது.
இதுபோல,  மட்டப்பாறைப்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கையும் எண்ணப்பட்டது. இதில் ரூ.2.18 லட்சம் ரொக்கம், 19 கிராம் தங்கம், 25 கிராம் வெள்ளி கிடைத்தது. இந்த பணியில் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT