குடிநீர் கோரி துறையூர் நகர 1வது வார்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனர்.
தங்களது வார்டில் சீராக குடிநீர் வழங்கவில்லை, அது தொடர்பாக புகார் செய்தும் பயனில்லை எனக் கூறி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஆத்தூர் சாலையில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்த துறையூர் காவல் ஆய்வாளர் குருநாதன், நகராட்சி மேலாளர் பாலகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் ஜெயமாலதி ஆகியோர் நேரில் சென்று குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.