பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் மாவட்டம் 324 ஏ-2 வின் இரண்டாம்துணை ஆளுநராக ( 2019-20 ஆம் ஆண்டு) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சௌமா. ராஜரத்தினத்துக்கு, மணப்பாறையில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மணப்பாறை லயன்ஸ் சங்கங்களின் சார்பில், கோவில்பட்டி சாலையிலுள்ள லட்சுமி மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது. விழாவுக்கு மணப்பாறை லயன்ஸ் சங்கத் தலைவர் ச.லோகநாதன் தலைமை வகித்தார்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரிப் பேராசிரியர் கா.செய்யது அகமது கபீர் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சௌமா. ராஜரத்தினம் ஏற்புரை வழங்கினார்.
தொடர்ந்து மருத்துவர் எஸ்.கே.ரெங்கநாதன், லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் சமுத்திரம் வி.கணேஷ், சௌமா கல்விக் குழும ஒருங்கிணைப்பாளர் என்.பொன்னுச்சாமி, வசந்தம் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர் ஜி.நவமணி சுந்தர்ராஜ், மணவைத் தமிழ் மன்றத் தலைவர் கரு.ராஜகோபாலன், ஜெசிஐ இந்திய தேசிய இயக்குநர் கதிர்வேல் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, மணப்பாறை லயன்ஸ் சங்கச் செயலர் ஆ.கலியபெருமாள் வரவேற்றார். நிறைவில் பொருளாளர் கே.சுப்புராஜ் நன்றி கூறினர்.