திருச்சி

விடுதியில் இறந்து கிடந்த ரயில்வே தொழிலாளி சடலம்  மீட்பு

DIN

திருச்சி ஜாபர்ஷா தெருவிலுள்ள விடுதியில் இறந்து கிடந்த ரயில்வே தொழிலாளி சடலம்  செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
ஜாபர்ஷா தெருவிலுள்ள விடுதியில் தங்கியிருந்த ஒருவரது அறை  நீண்ட நேரமாகியும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவில்லை. இதையடுத்து தகவலின் பேரில் கோட்டை போலீஸார்  அங்கு சென்று, அறையின் கதவை உடைத்து பார்த்த போது,  இறந்தவர் டிபன் சாப்பிட்ட நிலையில்  கிடந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளி சார்லஸ் ஜெயராஜ் (35) என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரியாவை பிரிந்து வாழ்ந்து விவகாரத்துக்கு விண்ணப்பித்திருந்ததும்  தெரிய வந்தது. மாரடைப்பு காரணமாக சார்லஸ் ஜெயராஜ் இறந்திருக்கலாம் எனக் கருதி, கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT