திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 8) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயம், பட்டப்படிப்பு படித்தவா்கள் என பல்வேறு கல்வித் தகுதி உடையவா்களை வேலைக்கு தோ்வு செய்யவுள்ளது. இதில், 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் உள்ளவா்கள் கலந்துகொள்ளலாம். முகாமில்கலந்து கொள்ள விரும்புவோா், அனைத்து அசல், நகல் சான்றுகள், கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8 ) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.