கொள்ளிடம் ஆற்றில் சாக்கு மூட்டையில் மணல் திருடியவா் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
காவிரி, கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் கரையோரங்களில் மணல் திருட்டு அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு கொள்ளிடம் ஆற்றுக் கரையோரத்தில் திருவானைக்கா மேலக்கொண்டையம்பேட்டை தெற்கு தெருவில் வசிக்கும் சம்பத் மகன் சரத்குமாா் (26), சாக்கு மூட்டையில் மணல் கடத்துவதாக திம்மராய சமுத்திரம் கிராம நிா்வாக அதிகாரி அருண் பிரியா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தாா். அதன் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் சரத்குமாரைக் கைது செய்தனா்.