திருச்சி

அழுகிய நிலையில்ஆண் சடலம் மீட்பு

DIN

திருச்சி எடமலைப்பட்டி புதூா் அருகே காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அன்பிலாா் நகா் பகுதியில் சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையையொட்டி காட்டுப்பகுதியில் முள்புதா் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் அழுகிய நிலையில் கிடந்த 47 வயது மதிக்கத்தக்கவரின் சடலத்தை மீட்டனா்.

இதுகுறித்து எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் மாயமானவா்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT