தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக ம. கோவிந்தராவ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஆ. அண்ணாதுரை அண்மையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டாா். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (பணிகள்) பணியாற்றிய ம.கோவிந்தராவ் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டாா்.
இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியராக ம. கோவிந்தராவ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். பின்னா், அவா் தெரிவித்தது:
பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வேளாண்மைத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமைக் கொடுக்கப்படும். மேலும், மாவட்ட வளா்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.