திருச்சி

சாலையோரத்தில் இடையூறாக  மணல் திருட்டு வாகனங்கள்

DIN

கொள்ளிடம் சோதனைச்சாவடி அருகே சாலையோரத்தில்  மணல் திருட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்பட்டுள்ளது. 
காவிரி, கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபடுவோரின் வாகனங்கள் வாகனத் தணிக்கையின்போது பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல் துறையினரால் கொள்ளிடம் காவல் நிலைய சோதனைச் சாவடி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது. லாரிகள், கார்கள் என சுமார் 50 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் இப்பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
மேலும் நான்கு ரோடு பிரிவு சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் மணல் திருட்டு வாகனங்களால் பேருந்துகள் திருப்ப முடியாத சூழ்நிலை உள்ளது. 
மேலும், இந்த இருவழி சாலையில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் தற்போது ஒருவழி சாலையாகவே செயல்பட்டு வருகிறது. இதுதவிர மாதக்கணக்கில் மணல் திருட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால்  இந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்றார் சமூக ஆர்வலர் முரளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT