திருச்சி

திருச்சி மத்திய சிறையில் போலீஸார் தீவிர சோதனை

செல்லிடப்பேசி, போதை பொருள்கள் வைத்துள்ளனரா என்பது குறித்து திருச்சி மத்திய சிறையில் கைதிகள் அறைகளில் போலீஸார் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

DIN

செல்லிடப்பேசி, போதை பொருள்கள் வைத்துள்ளனரா என்பது குறித்து திருச்சி மத்திய சிறையில் கைதிகள் அறைகளில் போலீஸார் சனிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,800 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகளிடம் செல்லிடப் பேசி மற்றும் போதை பொருள்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலும், சிறைக்குள் இத்தகைய தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டுவராமல் தடுக்கவும்  திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர்  தலைமையிலான தனிப்படை போலீஸார் மாதந்தோறும் சோதனை நடத்தி வருகின்றனர். 
அதன்படி,  சனிக்கிழமை 
(செப்.21) காலை 6 மணிக்கு உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் 35க்கும் மேற்பட்ட போலீஸார் மத்திய சிறையில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். 
அப்போது கைதிகள் அறை, உடைமைகள் பாதுகாக்கும் தனிஅறைகளில் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என சோதனை செய்தனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில் கைதிகளின்அறைகளில் இருந்து சிறை விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டதாக எந்த பொருள்களும் கைப்பற்றப்படவில்லை. 
இதே போல் காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள மகளிர் சிறையில் கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அருள்ஜோதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT