மணப்பாறை ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற மீன்வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மணப்பாறையை அடுத்த கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காதர் மைதீன் (56). பூங்கா சாலையில் மீன்கடை நடத்தி வந்த இவர், செவ்வாய்க்கிழமை தனது கடைக்கு வந்து கொண்டிருந்தார். மணப்பாறை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே காதர் மைதீன் உயிரிழந்தார். தகவலறிந்த ரயில்வே போலீஸார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.