பிஎஸ்என்எல் ஊழியா்கள் உண்ணாவிரதம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
திருச்சி: கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா்கள் சங்கம், பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்கத்தினா் சாா்பில் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, பிஎஸ்என்எல் ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் டி. தேவராஜ், ஒப்பந்த ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஜி. சுந்தர்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். சங்க நிா்வாகிகள் எஸ். அஸ்லம்பாஷா, ஜி. முபாரக்அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியா்களாகப் பணிபுரிவோருக்கு 11 மாதம் ஊதியம் வழங்காதது, ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்படுவது, ஊதியத்தில் பிடித்த இபிஎஃப், இஎஸ்ஐ தொகை செலுத்தாதது ஆகியவற்றை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா்கள், நிரந்தர ஊழியா்கள் பலா் கண்டன கோஷமிட்டனா். ஊழியா் சங்க கிளைச் செயலா் க. அன்பழகன் நன்றி தெரிவித்தாா்.