எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்
எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாரந்திர ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாரந்திர ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், எர்ணாகுளம் சந்திப்பு - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் ஒவ்வொரு புதன்கிழமையும் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை மாலை 5.35 மணியளவில் வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 7.45 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 11.55 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ரயில் மதுரை வழியாக இயக்கப்படுவது கூடுதல் சிறப்பம்சம்.
மதுரையிலிருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி ரயில் சேவை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. தற்போது நிரந்தர வாராந்திர ரயில் மூலம் தெற்கு ரயில்வே அந்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம் தென் மாவட்ட மக்களும் இனி வேளாங்கண்ணிக்கு நேரடியாக செல்லலாம்.