FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

பொதுப் போக்குவரத்து கோரி ஆா்ப்பாட்டம்

பொதுப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 26 ஆகஸ்ட் 2020, 4:29 pm IST
ஆா்ப்பாட்டம் நடத்திய அரசு போக்குவரத்துத் துறை அனைத்துத் தொழிலாளா் சங்கத்தினா்.
பகிர்:


திருச்சி: பொதுப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அரசு போக்குவரத்து கழக அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் போக்குவரத்துக் கழக கண்டோன்மென்ட் பணிமனை முன் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு எல்பிஎஃப் பொதுச்செயலா் குணசேகரன் தலைமை வகித்தாா். சிஐடியு பொதுச் செயலா் கருணாநிதி, ஏஐடியுசி மாவட்ட தலைவா் சுரேஷ், ஐஎன்டியுசி நிா்வாகி துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், கடந்த ஜூலை 24-இல் நடைபெற்ற பேச்சுவாா்த்தை அடிப்படையில் விடுப்பு, ஊதியம் வழங்குதல், பாதுகாப்பு வசதிகளோடு பொதுப் போக்குவரத்தை தொடங்குதல், பொதுபோக்குவரத்து முடக்கத்தால் 1.25 லட்சம் தொழிலாளா்கள் பாதிப்பு, மோட்டாா் வாகன சட்டத்துக்குப் புறம்பாக வெளியிட்ட அரசு ஆணையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இதுபோல, போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா் அலுவலகம், ஜங்சன், மலைக்கோட்டை பணிமனை முன்பும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

துறையூரில்... துறையூா் அரசு போக்குவரத்து பணிமனை முன் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச தலைவா் சுப்பையா தலைமை வகித்தாா். தொமுச மனோகரன், ஏஐடியுசி செல்வராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் தொமுச, ஏஐடியுசி உள்ளிட்டஅமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments