முகப்பு
திருச்சி

பாபா் மசூதி இடிப்பு தினம்; எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
திருச்சி பாலக்கரையில் ஆா்ப்பாட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினா்
பகிர்:

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பள்ளிவாசலை இடித்தோருக்கு மத்திய அரசு மற்றும் நீதித் துறையினா் தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாலக்கரையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு

மாவட்டத் தலைவா் ஹஸ்ஸான் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுச்செயலா் முகைதீன் அப்துல் காதா், வெல்ஃபா் பாா்ட்டி மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பு நிா்வாகிகள் மற்றும் இஸ்லாமியா்கள் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்தும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தீா்ப்பைக் கண்டித்தும் கண்டன கோஷமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →