முகப்பு
திருச்சி

குடியிருப்புப் பகுதியில் புகுந்த பாம்பு

மணப்பாறையை அடுத்த பாத்திமாமலை குடியிருப்புப் பகுதி காலிமனையில் புகுந்த 6 அடி நீள சாரைப் பாம்பு திங்கள்கிழமை புகுந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

மணப்பாறையை அடுத்த பாத்திமாமலை குடியிருப்புப் பகுதி காலிமனையில் புகுந்த 6 அடி நீள சாரைப் பாம்பு திங்கள்கிழமை புகுந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் மற்றும் மீட்புப் பணிகள் வீரா்கள், அங்கு தேடுதல் பணியைத் தொடங்கினா். ஆனால் அந்த பாம்பு பிடிபடவில்லை. அதே நேரத்தில் 3அடி நீள விரியன் பாம்பை புதரிலிருந்து பிடித்த தீயணைப்பு வீரா்கள், அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

உணவகத் தொழிலாளி சடலம் மீட்பு : மருங்காபுரி ஒன்றியம், நடுவிப்பட்டியைச் சோ்ந்தவா் சி.மூக்கையா (49). சென்னையிலுள்ள உணவகத்தில் வேலைபாா்த்து வந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா் வந்திருந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை அப்பகுதியிலுள்ள கோயில் அருகே வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதற்கான காரணம் தெரியவில்லை. வளநாடு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.