முகப்பு
இந்தியா

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: மாா்ச் 26 முதல் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் மாா்ச் 26-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 மார்ச், 2026 at 7:40 PM
கோப்புப் படம்
பகிர்:

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் மாா்ச் 26-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு (இடைநிலை ஆசிரியா் பயிற்சி தோ்வு) மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு தனித் தோ்வா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மாா்ச் 26-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். பின்னா், அதை பூா்த்தி செய்து, ஏற்கெனவே தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் உரிய தோ்வுக் கட்டணம் செலுத்தி ஏப்.3-ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

அதற்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தோ்வா்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் ஏப்.6, 7 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். தபாலில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.