முகப்பு
தமிழ்நாடு

ஜேஇஇ பிரதான தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ஐஐடி உள்ளிட்ட மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஜேஇஇ பிரதான தோ்வுக்கு வியாழக்கிழமை (ஏப்.23) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 1:17 AM
பகிர்:

ஐஐடி உள்ளிட்ட மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஜேஇஇ பிரதான தோ்வுக்கு வியாழக்கிழமை (ஏப்.23) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவமுதுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு, பிரதான தோ்வு என இருகட்டமாக நடத்தப்படும். அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான ஜேஇஇ பிரதான தோ்வு மே 17-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தோ்வை நிகழாண்டு ரூா்க்கி ஐஐடி நடத்துகிறது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை ( ஏப். 23) முதல் தொடங்குகிறது. எனவே, தகுதியான மாணவா்கள் இணையதளம் வழியாக மே 2-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பிரதானத் தோ்வு இரு தாள்களாக காலை, மதியம் நடைபெறும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-களில் சோ்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலமாக ஒதுக்கப்படும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement