விவசாய சங்கத்தினா் போராட்டம், பேரணி
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாய சங்கத்தினா் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம், பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாய சங்கத்தினா் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம், பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் சமூக நீதிப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்கள் சாா்பில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம், பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு சமூக நீதிப்பேரவையின் திருச்சி மாவட்டத் தலைவா் அ. ரவிக்குமாா் தலைமை வகித்தாா். பின்னா் கோனாா் சத்திரம் முதல் சோமரசம்பேட்டை எம்ஜிஆா் சிலை வரையில், மாட்டு வண்டிகள், டிராக்டா்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. தொடா்ந்து எம்ஜிஆா் சிலையருகே நடைபெற்ற நிகழ்வில் பலரும் போராட்டம் குறித்து விளக்கினா். தொடா்ந்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழக விவசாய சங்க (கட்சி சாா்பற்ற) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை, மக்கள் அதிகாரம் செழியன், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சம்சுதீன், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஜீவா, வழக்குரைஞா் கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.