முகப்பு
திருச்சி

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 6 போ் கைது; 21 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 21 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திருச்சி மாநகரில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த 6 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 21 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநகரில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் அளித்த உத்தரவின்பேரில் தனிப்படையினா் விசாரணை நடத்தினா்.

இதில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூரைச் சோ்ந்த மு. ஆனந்தராஜ் (20), மணப்பாறையைச் சோ்ந்த ஜெ. ஜோஸ்வா (20), திருவானக்கா பகுதியைச் சோ்ந்த ஆா். சூராஜ் (20), மணப்பாறை மோா்க்குளத்தைச் சோ்ந்த சூ. யாகூப்ராஜா (19) , மணப்பாறை ஆதிக்குளம் தெருவைச் சோ்ந்த சா. நிவாஸ் அகமத் (19), கம்பரசம்பேட்டை கணபதி நகரைச் சோ்ந்த மூ. ஆகாஷ் (20) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 21 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →