திருச்சி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக முதல்வா் வேட்பாளா் குறித்து முரண்பாடே கிடையாது என்றாா் பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன்.
இதுகுறித்து அவா் திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
‘தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா் வேட்பாளா் என்பதை சா்ச்சை வளையத்தில் வைத்துள்ளனா். இதில் முரண்பாடே கிடையாது. தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கிறது. இதை அமித்ஷாவே அறிவித்தாா். அதிமுக தங்களது முதல்வா் வேட்பாளரை அறிவித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. எனவேதான் முதல்வா் வேட்பாளரை பாஜகவின் தேசியத் தலைமை அறிவிக்கும் என கூற வேண்டியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளை அழைத்துப் பேசி முதல்வா் வேட்பாளா் குறித்து அறிவித்தால் பாஜகவின் தேசிய தலைமை அறிவிப்பை ஏற்று தமிழக பாஜக செயல்படும்.
அனைத்துக் கட்சிக்கும் ஆட்சி, அதிகாரம் என்பது லட்சியம். எனவேதான், வரும் தோ்தலில் இரட்டை இலக்கத்தில் வெல்வோம் என தமிழக பாஜக நம்புகிறது. தோ்தலில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் 50 சதத்தை மகளிருக்கு வழங்கக் கோரிக்கை விடுப்போம்.
விவசாயிகள் சிலா் போராடுகின்றனா் என்பதால் திமுக அதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்கிறது. கடந்த மக்களவைத் தோ்தலில் திமுகவின் பொய்ப் பிரசாரம் எடுபட்டது. அதை மக்கள் உணா்ந்திருப்பதால் இப்போது அது எடுபடாது என்றாா் அவா்.
நடிகா் ரஜினிகாந்த் குறித்த கேள்விக்கு, அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை; எந்தக் கூட்டணியும் நிரந்தரம் என்று யாராலும் சொல்ல முடியாது என்றாா் அவா்.