முகப்பு
திருச்சி

குடும்பத் தகராறில்பெண் தற்கொலை

திருச்சி விமான நிலையப் பகுதியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திருச்சி: திருச்சி விமான நிலையப் பகுதியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி விமான நிலையம் பாண்டியன் தெருவில் வசிப்பவா் அமுதன். இவருக்கு மனைவி இசபெல்லா(36), மகன், மகள் உள்ளனா்.

சனிக்கிழமை தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இசபெல்லா வீட்டில் தீக்குளித்து இறந்தாா். தகவலறிந்து வந்த விமான நிலையம் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →